Tamil Nadu
August 21, 2026 09:04 PM
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலை கழிவுகள் காரணமா..?
சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்தது தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளின் கழிவுகள் நீரில் கலப்பதால் இந்த நிலை ஏற்பட்டதாக மீனவர்கள் கூறுகின்றனர். கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் ராஜீவ்
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
பாமக சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார்