📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health June 25, 2026 05:30 PM

எழுத்தாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்; 2025

எழுத்தாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்; 2025

தமிழ் எழுத்துலகை ஊக்கப்படுத்தும் நோக்கில், கவிதை, புதினம், வரலாறு, அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட 33 பிரிவுகளில் வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் வெளியான நூல்களின் ஆசிரியர்களுக்கு ரூ.50,000 மற்றும் சம்பந்தப்பட்ட பதிப்பகங்களுக்கு ரூ.25,000 பரிசுத் தொகையுடன் இந்த அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31, 2026 கடைசி நாள் எனத் தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2025-ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுத் திட்டத்திற்குத் தகுதியான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

33 பல்வேறு வகைப்பாடுகள்:

இப்பரிசுத் திட்டத்திற்கு 2025-ஆம் ஆண்டில் வெளியான நூல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட 33 பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த நூல்கள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

2025-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan#CMJosephVijay#TNOfficialUpdates#TNDIPR#TamilNadu#TNGovt#CMForThePeoplepic.twitter.com/MhB7MkdloX

பரிசுத் தொகை விபரம்:

தேர்வு செய்யப்படும் சிறந்த நூல்களின் படைப்பாளர்களுக்குப் பாராட்டும், நிதியுதவியும் வழங்கப்பட உள்ளது.

நூலாசிரியருக்கு: ரூ. 50,000/-

பதிப்பகத்திற்கு: ரூ. 25,000/-

விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்:

இப்பரிசுத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் இதற்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ் வளர்ச்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tamilvalarchithurai@tn.gov.in (குறிப்பு: விளம்பரத்தில் மின்னஞ்சல் வடிவில் இணையதள முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது, படைப்பாளிகள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தையும் நாடலாம்) என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.08.2026 ஆகும்.

இது குறித்த கூடுதல் விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர்கள் 044-28190412 / 28190413 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உங்கள் படைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கட்டும்! உடனே விண்ணப்பியுங்கள்" எனத் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் எழுத்தாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.