📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 18, 2026 07:33 AM

ஹர்திக் பாண்டியாவுக்கு டாடா பை! பை! ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்.. நிதிஷ் குமார் அபாரம்

ஹர்திக் பாண்டியாவுக்கு டாடா பை! பை! ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்.. நிதிஷ் குமார் அபாரம்

ஹர்திக் பாண்டியாவுக்கு டாடா பை! பை! ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்.. நிதிஷ் குமார் அபாரம்

டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 221/7 என்ற வலுவான ஸ்கோரைக் குவித்தது. இந்த இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியை, இந்திய பந்துவீச்சாளர்கள் முற்றிலும் கட்டுப்படுத்தி ஆட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றினர்.

குறிப்பாக, நிதிஷ் குமார் ரெட்டி வீசிய 12-வது ஓவர் ஆப்கானிஸ்தான் அணியின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அந்த ஓவரில் அவர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் முகமது நபியின் விக்கெட்டை ரெட்டி வீழ்த்தினார்.

ஸ்டம்புகளை குறிவைத்து வீசப்பட்ட அந்த ஷார்ட் லென்த் பந்தை லெக் சைடில் அடிக்க முயன்ற நபி, அதில் முற்றிலும் ஏமாந்து கிளீன் போல்டானார். தொடர்ந்து, அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் அஸ்மதுல்லா உமர்சாயின் விக்கெட்டை எடுத்தார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட ஃபுல் லென்த் பந்தை உமர்சாய் தூக்கியடிக்க முயல, அது ஸ்வீப்பர் கவர் திசையில் நின்றிருந்த ரவி பிஷ்னோயிடம் கேட்ச் ஆனது.

பின்னர், அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் முஜீப் உர் ரஹ்மானை ஒரு துல்லியமான யார்க்கர் பந்து மூலம் போல்டாக்கினார். இந்த யார்க்கர் பந்தை சற்றும் எதிர்பாராத முஜீப், பேட்டை கீழே இறக்குவதற்குள் பந்து ஸ்டம்புகளைத் தகர்த்தது.

ஒரே ஓவரில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 94 ரன்களுக்கு சுருண்டது. காயத்தில் இருந்து மீண்டு வந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு, இந்தத் தொடரின் முதல் போட்டியில் பந்துவீச்சு எதிர்பார்த்த அளவு அமையவில்லை. அவர் வீசிய 2 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இருப்பினும், அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் மிகச்சிறப்பான முறையில் மீண்டு வந்தார். இரண்டாவது டி20 போட்டியில் 3 ஓவர்கள் வீசி 24 ரன்கள் மட்டுமே வழங்கி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியதுடன், நிதிஷ் ரெட்டி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

மூன்றாவது டி20 போட்டியில் பந்துவீச்சைத் தொடங்கிய நிதிஷ், தனது முதல் ஓவரில் 15 ரன்கள் கொடுத்தார். ஆனால், அதன் பிறகு ஆட்டத்திற்குள் வலுவாக மீண்டு வந்து 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் விளையாடிய 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விளையாடாத நிலையில், நிதிஷ்குமார் தனது திறமையை நிரூபித்து அவருடைய இடத்தை பந்துவீச்சில் நிரப்பி இருக்கிறார்.