IND vs SL: துருவ் ஜூரல் அபார சதம்.. இந்திய அணி ரன் குவிப்பு.. சர்பராஸ் கான் இடம் போச்சு!
IND vs SL: துருவ் ஜூரல் அபார சதம்.. இந்திய அணி ரன் குவிப்பு.. சர்பராஸ் கான் இடம் போச்சு!
கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது நிலையை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. துருவ் ஜூரல் சதம் அடித்து அசத்தியுள்ளார். மழையின் குறுக்கீடுகளால் ஆட்டம் பலமுறை பாதிக்கப்பட்ட போதிலும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 489 ரன்கள் குவித்துள்ளது.
இரண்டாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆக்ராவில் பிறந்த துருவ் ஜூரெல் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வலுவான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றது. மதிய உணவுக்குப் பிந்தைய ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் ஆட்டமிழந்த போதிலும், துருவ் ஜூரெல் தொடர்ந்து நிதானமாக விளையாடி 99 ரன்கள் வரை எடுத்து சதத்தை நெருங்கினார்.
மறுமுனையில் துருவ் ஜூரெலுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்த மானவ் சுதார் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு விக்கெட்டைப் பாதுகாக்க போராடினார். சிராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கொழும்பில் பெய்த கனமழை காரணமாக ஆட்டம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டது. ஆடுகளம் மற்றும் மைதானப் பகுதிகள் முழுமையாக மூடப்பட்டன. மழை நின்றவுடன், இலங்கையின் திறமையான மைதான ஊழியர்கள் மிக விரைவாக தண்ணீரை அகற்றி ஆட்டத்தை மீண்டும் தொடங்க வழிவகுத்தனர். இதனால் குறைந்தபட்சம் 77 ஓவர்கள் வீச திட்டமிடப்பட்டு ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இதனையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியதை அடுத்து, துருவ் ஜூரல் தனது 2வது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் அசிதா பெர்னாண்டோ சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சுழற்பந்து வீச்சாளர்களான பிரபாத் ஜெயசூர்யா மற்றும் கேஷர நுவந்தா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முயன்றனர். எனினும், இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பான பேட்டிங்கால் இலங்கை அணியால் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.