இங்கிலாந்துக்கு குட் பாய்.. ஆஸ்திரேலிய நாட்டு அணியுடன் இணைந்த ஆண்டிரு பிளிண்டாஃப்
இங்கிலாந்துக்கு குட் பாய்.. ஆஸ்திரேலிய நாட்டு அணியுடன் இணைந்த ஆண்டிரு பிளிண்டாஃப்
லண்டன்: ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற டி20 பிக் பேஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஆண்ட்ரூ பிளின்டாஃப் விலகியுள்ளார்.
48 வயதான பிளின்டாஃப், கடந்த 23 மாதங்களாக இங்கிலாந்து லயன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்தார். பிபிசி தொலைக்காட்சியின் 'டாப் கியர்' வாகன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியபோது ஏற்பட்ட கார் விபத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டில் மீண்டும் கிரிக்கெட் உலகிற்குத் திரும்பினார்.
இங்கிலாந்து வெள்ளை நிற பந்து கிரிக்கெட் அணிகளுடன் இணைந்து பணியாற்றியதுடன், 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரின் போது அந்நாட்டு அணியின் பயிற்சிக்குழுவிலும் அவர் இடம்பெற்றார்."இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான எனது பொறுப்பில் இருந்து விலகும் முடிவை நான் எடுத்துள்ளேன். நாட்டின் மிகச்சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைவதுடன், அவர்கள் சர்வதேச அளவிலான வீரர்களாக உருவெடுப்பதைக் கண்டு பெரும் பெருமை கொள்கிறேன்," என்று பிளின்டாஃப் தெரிவித்துள்ளார்.
"தினமும் அயராது உழைத்து ஆதரவளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். குறிப்பாக, செயல்திறன் இயக்குநராக இருந்த எட் பார்னியுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக அமைந்தது. என் மீது நம்பிக்கை வைத்து இங்கிலாந்து கிரிக்கெட்டின் மிக முக்கியப் பொறுப்பை வழங்கிய ராப் கீ-க்கு எனது நன்றிகள். இந்த ஆண்டின் இறுதியில் சிட்னி தண்டர் அணியுடன் எனது புதிய பயணத்தைத் தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று கூறினார்.
2005 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை வெல்வதில் முக்கியப் பங்காற்றிய முன்னாள் கேப்டனான பிளின்டாஃப், இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான 'தி ஹண்ட்ரட்' போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். தற்போது லயன்ஸ் அணியில் இருந்து அவர் விலகுவது, இங்கிலாந்தின் முன்னணி இளம் வீரர்களுடன் அவர் பயணித்துது முடிவுக்கு வந்தது.