மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது
மாணவர்கள், இளைஞர்களின் ஜனநாயக உரிமையை தமிழ்நாடு அரசு பறிக்கக் கூடாது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் வலியுறுத்தல். இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நிர்வாகக்குழு கூட்டம்
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள், இடதுசாரி கட்சிகள், தமிழ்நாடு காக்ரோச் கட்சி நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு உத்திரவிட்டுள்ளதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய குடிமக்களுக்கு அரசியல் சிந்தனை, சமூக அக்கறை, கருத்துரிமை, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை ஆகியவை அரசியலமைப்பு சட்டத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாணவர்களும், இளைஞர்களும் நாட்டின் குடிமக்களாவர். கல்வி நிறுவனங்களில் பயில்கிறார்கள் என்பதற்காக, அந்த அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிக்க முடியாது.
முக்கிய சக்தி
18 வயதானவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கும் போது, அவர்கள் தமது அரசியல் செயல்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது என்று அரசு தடுப்பது, கல்வி நிறுவனங்களை ஜனநாயக விவாதங்களிலிருந்து துண்டித்து, இளைஞர், மாணவர்களை அரசியலற்றவர்களாக மாற்ற முயலும் அதிகார வர்க்க அணுகுமுறையாகும்.
குற்றச்செயலாகும்
திமாகி நக்சல்
துறைவாரி நடவடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பட்டியலை, முகவரியோடு ஒரே நாளில் தயாரித்து தருமாறு வட்டாட்சியர் உத்திரவிட்டார்.
ஜனநாயக மாண்புகள்
மாணவர் பேரவை தேர்தல்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.