📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Videos news August 24, 2026 01:04 PM

மலையில் இருந்து குதித்து மகன், பெற்றோர் உயிரிழந்த சம்பவம்: கடைசியாக கணவரை விமர்சித்து மனைவி வெளியிட்ட வீடியோ வைரல்

மலையில் இருந்து குதித்து மகன், பெற்றோர் உயிரிழந்த சம்பவம்: கடைசியாக கணவரை விமர்சித்து மனைவி வெளியிட்ட வீடியோ வைரல்

மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வின் சத்​ரபதி சம்​பாஜிநகர் மாவட்டத்தைச் சேர்ந்​தவர் முரளிதர் சந்த்​குடே (48). அவரது மனைவி சங்​கீதா (44). இத்​தம்​ப​தி​யின் மகன் குணால் (18). கடந்த 21-ம் தேதி கவாடா மலை​யில் இருந்து கீழே குதித்து குணால் தற்கொலை செய்து கொண்​டார்.

அவரைக் காப்​பாற்ற முயன்ற தந்தை முரளிதர் நிலை தடு​மாறி கீழே விழுந்து உயி​ரிழந்​தார். இதைப் பார்த்த சங்​கீதா மலை​யில் இருந்து கீழே குதித்து உயிரை மாய்த்​துக் கொண்​டார். அண்மையில் குணால் தவணை முறை​யில் ஐ போனை வாங்கி உள்​ளார்.

அதற்கு தந்தை முரளிதர் தவணைத் தொகையை செலுத்த மறுத்​த​தால் மகன் தற்​கொலை செய்து கொண்​ட​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஆனால் அவர்​களின் குடும்​பத்​தில் பல்​வேறு பிரச்​சினை​கள் இருந்​தது தெரியவந்துள்ளது. லாரி ஓட்​டுந​ரான முரளிதர் பணி நிமித்​த​மாக அடிக்​கடி வெளியூர் செல்​வது வழக்கம். அவரது மனைவி சங்​கீதா உள்​ளூர் யூ டியூப் பிரபல​மாக இருந்தார். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு​கள் எழுந்​தன.

கணவரின் வரு​மானம், குடும்ப சொத்​துகள் உள்​ளிட்ட விவகாரங்களில் முரளிதர், சங்​கீதா இடையே பிரச்​சினை​கள் நீடித்து வந்​தன. இந்த சூழலில் கடந்த 20-ம் தேதி சங்​கீதா யூ டியூபில் ஒரு வீடியோவை வெளி​யிட்​டுள்​ளார்.

அதில், “ஒரு​வர் உங்​களை நேசித்​தால், அந்த நபரின் அன்​புக்​காக எதை​யும் செய்​ய​லாம். ஆனால் உங்​கள் அன்பை புரிந்து கொள்ளாத நபரால் எந்​தப் பயனும் இல்​லை. அப்​படிப்​பட்ட நபருக்காக நாம் எதை​யும் செய்​யத் தேவை​யில்​லை. இரு​வரும் பரஸ்​பரம் நேசித்​தால் மட்​டுமே உறவு நீடித்​திருக்​கும்” என்று தெரிவித்துள்ளார்.

கணவரை விமர்சிக்கும் வகையில் சங்​கீதா வெளி​யிட்ட இந்த வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில்​ வைரலாக பரவி வருகிறது.