📅 Sunday, 16 August 2026 IST | ஆடி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu May 23, 2026 06:00 PM

விமானத்தில் மீண்டும் மீண்டும் கோளாறு; சென்னை விமானநிலையத்தில் பயணிகள் அவதி

விமானத்தில் மீண்டும் மீண்டும் கோளாறு; சென்னை விமானநிலையத்தில் பயணிகள் அவதி

சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அந்த விமானத்தின் பயணிகள் ஏறத்தாழ 12 மணி நேரம் அவதிக்குள்ளானார்கள்.</p> <p class="mb-4 leading-relaxed">வெள்ளிக்கிழமை (மே 22) இரவு 7.40 மணிக்கு சென்னையிலிருந்து கோல்கத்தா புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.</p> <p class="mb-4 leading-relaxed">அதன்படி, இரவு 10.15 மணியளவில் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது அதில் இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.</p> <p class="mb-4 leading-relaxed">அதனால் அந்த இடத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டு பழுதுபார்ப்புப் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பழுதுபார்ப்புப் பணிக்குப் பின்னர் இரவு 11.30 மணிக்கு விமானம் மீண்டும் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.</p> <p class="mb-4 leading-relaxed">ஒருவழியாக இரவு. 11.50 மணியளவில் விமானம் புறப்பட்டு தரையில் உருண்டு செல்லத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மீண்டும் இயந்திரக் கோளாறு இருப்பதாக அறிவித்த விமானி அவசரமாக அதனை நிறுத்தினார்.</p> <p class="mb-4 leading-relaxed">அதன் பிறகு அந்த விமானம் எப்போது புறப்படும் என்று தெரியாததால் விமானத்திலிருந்து 180 பயணிகளும் 7 பணியாளர்களும் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.</p> <p class="mb-4 leading-relaxed">பயணிகளில் எரிச்சலடைந்த சிலர், பயணத்தை ரத்துசெய்துவிட்டு விமான நிலையத்தைவிட்டுக் கிளம்பினர். வேறுசிலர் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றினர். எஞ்சிய பயணிகளை சனிக்கிழமை காலை அதே விமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ததாக அதிகாரிகள் கூறினர்.</p> <p class="mb-4 leading-relaxed">சூறைக்காற்றால் விமானங்கள் தாமதம்</p> <p class="mb-4 leading-relaxed">இந்நிலையில், சனிக்கிழமை காலை சென்னை விமான நிலையப் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசியதால் பத்துக்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டது.</p> <p class="mb-4 leading-relaxed">ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருப்பதிக்குச் சென்றது. அதேபோல துபாயிலும் அபுதாபியிலும் இருந்து வந்த விமானங்கள் சூறைக்காற்றால் சென்னையில் தாமதமாகத் தரையிறங்கின.</p> <p class="mb-4 leading-relaxed">அதேபோல, டெல்லி, கோல்கத்தா, பெங்களூரு, கோவை மற்றும் மதுரைக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.