Tamil Nadu
August 30, 2026 08:03 AM
தமிழகம் புதுச்சேரியில் செப்., 3 வரை மழை
சென்னை: வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், செப்., 3 வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தற்போது, தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை முதல், செப்., 3 வரை, வட கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில், இன்று மாலை, இரவு நேரங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu