தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; ஊழல்வாதிகளுக்கு கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
மதுரை: தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது; ஊழல் வாதிகளுக்கு தான் பாதுகாப்பு கிடையாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: பிரதமர் வேட்பாளர் பற்றி பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது. இது குறித்து யாரும் பேசவே இல்லை. தவெக-காங்கிரஸ் இடையே எந்த முரண்பாடும் கிடையாது. பிரதமர் விஜய் என்து ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் மட்டுமே. நமது அரசு மக்களுக்கான அரசு. எப்பொழுது மக்களுக்கு செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியாக செய்வோம்.
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது; ஊழல் வாதிகளுக்கு தான் பாதுகாப்பு இல்லை. திங்கள் கிழமை முதல்வர் பதிலுக்கு பிறகு 2 மானிய கோரிக்கை நடக்கும். ஒவ்வொரு நாளும் சட்டசபை 7 மணி நேரம், 8 மணி நேரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சட்டசபையில் அனைவருக்கும் பேச சரி சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவில் விஷயத்தில் எங்களுடைய தலையீடு இல்லை; முந்தைய அரசு செய்த எந்த தவறையும் நாங்கள் செய்ய மாட்டோம்.
நேரு வீட்டில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை இல்லை, ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் தான் ரெய்டு நடக்கிறது. சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவிப்பார்கள். வரும் தேர்தலில் அதிமுக, திமுக ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. யார் யாருடன் சேர்ந்தாலும் எங்கள் ஆட்சியை எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்