Latest News
July 18, 2026 11:34 AM
வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை: ரூ.82 லட்சம் பறிமுதல்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.82 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் திடீர் சோதனை
41 இடங்களில் சோதனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 35 தாலுகா அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம் சிக்கியது. இதில், கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூ.13 லட்சமும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ.68 லட்சமும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
தீவிர விசாரணை
தொடர்புடைய செய்திகள்
Latest News