அபிஷேக் சர்மா 30 பந்தில் செஞ்சுரி... மெகா உலக சாதனை.. அரண்டு போன ஆப்கானிஸ்தான் வீரர்கள்
அபிஷேக் சர்மா 30 பந்தில் செஞ்சுரி... மெகா உலக சாதனை.. அரண்டு போன ஆப்கானிஸ்தான் வீரர்கள்
டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டின் பேட்ஸ்மேன் சர்வதேச டி20 போட்டியில் அடித்த அதிவேக சதமாக இது பெரும் சாதனையாக மாறி உள்ளது.
டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிக்ஸர் மழையைப் பொழிந்த அபிஷேக், வெறும் 16 பந்துகளில் அரைசதம் கடந்தார். முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர்பிளே முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் குவித்த போது, அதில் அபிஷேக் சர்மா மட்டுமே 22 பந்துகளில் 76 ரன்களை விளாசியிருந்தார். இவரது அசுர வேக பேட்டிங் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலைய வைத்தது.