📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 28, 2026 02:04 AM

நான் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல

நான் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல

அண்ணா சொன்னது போல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெறும் கரண்டியோடு வருபவர்களுக்கு சமம். ஆளுங்கட்சியினர் எண்ணெய் உடன் கூடிய கரண்டியுடன் வரவேண்டும்.

தமிழ்நாடு சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

உதயநிதி ஸ்டாலின்

ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அயோத்திதாசர் குடியிருப்பு கொண்டு வந்தது திமுக அரசு. அம்பேத்கர் அயலக திட்டத்தை கொண்டு வந்தது திமுக. சிலர் தேவையில்லாத விஷயங்களை எழுப்பி தவறான பாதைக்கு செல்கின்றனர் என்றார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

சமூக நீதி பேசக்கூடிய திமுக கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசவே இல்லை. மேற்கு வங்கம், பீகாரில் 3 மாதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி செயல்படுத்தினார்கள். மத்திய அரசு பாஜக அனுமதி கொடுக்க வேண்டும் என்று தப்பிக்க கூடாது என்று கூறினார்.

கோவி செழியன்

இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ பேச்சிற்கு த.வெ.கவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய திமுக எம்எல்ஏவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்தார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர், வாளோடு வரும் எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி கேடயம் கொண்டு தடுக்க வேண்டுமே தவிர வாள் கொண்டு எதிர்க்க கூடாது என்றார்.