ஒற்றை கையில் மிரட்டல் கேட்ச் பிடித்துவிட்டு நம்பவே முடியாமல் நின்ற கிளென் பிலிப்ஸ்.. ஏமாந்த நரைன்
ஒற்றை கையில் மிரட்டல் கேட்ச் பிடித்துவிட்டு நம்பவே முடியாமல் நின்ற கிளென் பிலிப்ஸ்.. ஏமாந்த நரைன்
டிரினிடாட்: 2026 கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) டி20 தொடரில், டிரினிடாட் அண்ட் டொபாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் ஒற்றை கையில் பிடித்த மிரட்டல் கேட்ச் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்களில் கிளென் பிலிப்ஸ் ஃபீல்டிங்கில் சூப்பர் மேனாக பாய்ந்து பந்தை தடுப்பது, கேட்ச் பிடிப்பது என வியக்க வைத்து வருகிறார். இந்தப் போட்டியிலும் அது போன்ற ஒரு சம்பவத்தை செய்து விட்டு தன்னை தானே நம்பாமல் நின்றார்.
பின்னர் அலெக்ஸ் ஹேல்ஸ் 23 பந்துகளில் 50 ரன்களும், ஜோசுவா டா சில்வா கடைசி நேரத்தில் பவுண்டரிகளும் அடித்து போராடினர். ஆனாலும், டிரினிடாட் அணியால் 16 ஓவர்களில் இலக்கை எட்ட முடியவில்லை. இறுதியாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிலிப்ஸின் இந்த அசாத்திய கேட்ச் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.