📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 30, 2026 02:03 PM

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஜாக்பாட்.. உலகக்கோப்பை அணியில் இடம் அளிக்க பிசிசிஐ முடிவு

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஜாக்பாட்.. உலகக்கோப்பை அணியில் இடம் அளிக்க பிசிசிஐ முடிவு

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ஜாக்பாட்.. உலகக்கோப்பை அணியில் இடம் அளிக்க பிசிசிஐ முடிவு

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இந்திய அணியில் பெரிய ஜாக்பாட் அடிக்க உள்ளது. 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி அடுத்த சில மாதங்களில் அடுத்தடுத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் செப்டம்பர் 30 அன்று தொடங்குகிறது. இதற்கிடையே, ருதுராஜ் கெய்க்வாட்டை மிடில்-ஆர்டரில் களமிறக்கி சோதிக்காமல், அவரது இயல்பான தொடக்க வீரர் இடத்திலேயே நீடிக்க வைக்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது. அவர் முன்னதாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 4-வது வரிசையில் களம் இறங்கி சதம் அடித்திருந்தாலும், மாற்றுத் தொடக்க வீரராகவே அவரை பிசிசிஐ தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரில் இந்திய ஏ அணியின் துணை கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட், அபாரமாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். ஆசிய விளையாட்டு போட்டிகள் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, இஷான் கிஷன் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்பதால், ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். கேப்டன் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டால் ருதுராஜ் மாற்று தொடக்க வீரராக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்.

மறுபுறம், மற்றொரு இளம் வீரரான தேவ்தத் படிக்கல் ஒருநாள் போட்டிகளுக்குத் திரும்புவது தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தக்கவைக்க தேர்வு குழுவினர் முடிவு செய்துள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படிக்கல் 328 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது வென்றது இதற்கு முக்கிய காரணமாகும். இதற்கிடையே, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியைத் தேர்வு செய்ய செப்டம்பர் 3 அன்று தேர்வு குழுவினர் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.