இரண்டாயிரம் ஆண்டுகள்: தமிழின் நீட்சி
இரண்டாயிரம் ஆண்டுகள்: தமிழின் நீட்சி
ஒரு மொழி இரண்டாயிரம் ஆண்டுகள் எப்படி உயிர்வாழ்கிறது? தமிழ் அதைச் சரியாகச் செய்திருக்கிறது - உலகின் தொன்மையான உயிருள்ள மொழிகளில் ஒன்று; மதுரையிலிருந்து, மட்டக்களப்பு மட்டுமல்ல, இங்கு மெல்பன் வரை, கோடிக்கணக்கானோரால் இன்றும் பேசப்படும் மொழி. ஆனால், உயிர்வாழ்வது என்பது பாதுகாப்பாக இருப்பது அல்ல. ஆங்கிலமும், algorithmகளும், வேகமான பண்பாட்டு மாற்றங்களும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் - ஒரு மொழியை, அதனுள் மடிந்திருக்கும் முழுப் பண்பாட்டையும் சேர்த்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதற்கு உண்மையில் என்ன தேவை? இதைப் பற்றியே பல ஆண்டுகளாகச் சிந்தித்து ஆய்வு செய்தவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் வீ அரசு அவர்கள். அண்மையில் அவர் ஆஸ்திரேலியா வந்திருந்த வேளை, அவரை SBS ஒலிபரப்புக்கூடத்தில் குலசேகரம் சஞ்சயன் சந்தித்து நேர்கண்ட வேளை, “தமிழை அல்ல... தமிழியத்தை மாணவர்கள் கற்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார். அந்த நேர்காணல் இது.
Two Thousand Years and Counting: The Endurance of Tamil