📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 05, 2026 07:02 PM

ஜட்டியை கழட்டுவேன் என்று சொன்ன அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?’ அன்பில்

ஜட்டியை கழட்டுவேன் என்று சொன்ன அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?’ அன்பில்

'ஜட்டியை கழட்டுவேன் என்று சொன்ன அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தீர்களா?’ அன்பில் மகேஸ் ஆவேசம்..!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஸ்க்கும் தவெக அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்.

ஜட்டியை கழட்டிவிடுவேன் என்று சொன்னவர் மீது எப்போது நடவடிக்கை ?

அப்போது பேசிய அவர் தவெக அரசு காவிரி விவகாரத்தை மடைமாற்றவே, உதயநிதி ஸ்டாலினை கைது செய்திருப்பதாகவும், ஜட்டியை கழட்டு உட்கார வச்சு, கொன்னு போட்ருவேன் என்று சொன்ன தவெக பெண் அமைச்சர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அதோடு, போதைப் பொருள் புகழ் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

வாய் திறக்காத தவெக

நீட் என்றாலும், காவிரி நதி நீர் பிரச்னை என்றாலும் வாய் திறக்காத முதல்வர் விஜய், திமுகவினர் மீது ஏதோ ஒரு வகையில் பொய் வழக்கை போட்டு வருகிறார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் மீதே வழக்கு போட்டு அவரை கைது செய்திருக்கின்றனர்.

சவால் விட்ட உதயநிதி - பயந்த விஜய் – அன்பில் மகேஷ் ஆவேசம்

அதே நேரத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் காவிரி விவகாரம் தொடர்பாக பார்த்துக்கொள்கிறேன் என உதயநிதி சவால் விட்ட நிலையில், அதற்கு பயந்துகொண்டு அவர் மீது பொய் வழக்கு போட்டு இப்போது முதல்வர் விஜய் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி