📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 30, 2026 12:04 PM

மரத்தில் கட்டிப்போட்டு தீ வைத்த பிறகு 2 மாதம் சிகிச்சையில் போராடிய பஞ்சாப் இன்ஃப்ளூயன்சர் உயிரிழப்பு

மரத்தில் கட்டிப்போட்டு தீ வைத்த பிறகு 2 மாதம் சிகிச்சையில் போராடிய பஞ்சாப் இன்ஃப்ளூயன்சர் உயிரிழப்பு

சண்டிகர்: பஞ்​சாப் மாநிலத்​தைச் சேர்ந்த இன்ஃப்​ளூயன்​சர் (சமூக ஊடக பிரபலம்) மன்​ஜீத் கவுர் (28). யூடியூப், இன்​ஸ்​டாகி​ராம் போன்ற சமூக வலைத்​தளங்​களில் இவரை லட்​சக்​கணக்​கானோர் பின்​தொடர்​கின்​றனர்.

கடந்த ஜூலை 3-ம் தேதி இவரை மர்ம நபர்​கள் காரில் கடத்​திச் சென்​றனர். செல்​லும் வழி​யில் அவரை சரமாரி​யாக தாக்​கிய அந்த நபர்​கள், பஞ்​சாப்​பின் ரூப்​நகர் மாவட்​டத்​தில் உள்ள மொரிண்​டா​வில் காரை நிறுத்​தினர்.

பின்​னர் அவர்​கள் மன்​ஜீத் கவுரை அங்​குள்ள ஒரு மரத்​தில் கட்​டிப்​போட்​டு, அவரது உடலில் தீ வைத்​து​விட்டு தப்​பிச் சென்​றனர். தகவல் அறிந்து வந்த அவரது நண்​பர் மருத்​து​வ​மனை​யில் சேர்த்தார்.

முதலில் மொரிண்​டா​வில் உள்ள ஒரு மருத்​து​வ​மனை​யில் சேர்க்கப்​பட்ட நிலை​யில், அவரது தீக்​கா​யங்​களின் தீவிரத்​தன்மை காரண​மாக, ஜூலை 9-ம் தேதி சண்​டிகரில் உள்ள பிஜிஐஎம்​இஆர் மருத்​து​வ​மனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்​நிலை​யில், 2 மாதங்​களாக தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்த​போ​தி​லும் மன்​ஜீத் கவுர் கடந்த புதன்​கிழமை பரி​தாப​மாக உயி​ரிழந்​தார். அவரது தாயார் அளித்த புகாரின் பேரில் அடையாளம் தெரி​யாத நபர்​கள் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.