மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகல் உறுதி? ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான பதிவு
மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகல் உறுதி? ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான பதிவு
மும்பை: ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆல்-ரவுண்டரை வேறு அணிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகின. 2015 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் ஐபிஎல் தொடரில் அறிமுகமான இந்த ஆல்-ரவுண்டர், 2022 சீசனுக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து விலகி குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்தார்.
அறிமுகமான முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணியை சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்திய ஹர்திக், மேலும் ஒரு சீசனுக்கு அந்த அணியின் கேப்டனாக தொடர்ந்தார். அதன் பின்னர், டிரான்ஸ்பர் விண்டோ மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி அவரது சேவையை மீண்டும் பெற்றது. இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பு ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இருப்பினும், எதிர்பார்த்தபடி முடிவுகள் அமையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. அடுத்த சீசனில் Qualifier 2 வரை முன்னேறிய மும்பை இந்தியன்ஸ், ஐபிஎல் 2026 இல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து சீசனை முடித்தது.
ஹர்திக் பாண்டியாவின் டிரேடிங் குறித்த வதந்திகள் பரவி வரும் வேளையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவரது சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இதனை அவர் மும்பை அணியில் தொடர்வார் என்பதை காட்டுவதாக ஒரு தரப்பினரும், மற்றொரு தரப்பினர் ஹர்திக் வெளியேற உள்ளதை காட்டுவதாக மற்றொரு தரப்பினரும் கூறியுள்ளனர். ஐபிஎல் டிரான்ஸ்பர்கள் மற்றும் டிரேடிங் தொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஒரு நேரடியான கோரிக்கையை வைத்துள்ளார்.
"ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு வீரர்கள் மாறுவது குறித்து ஊடகங்களில் சில யூகங்கள் எழுந்துள்ளன. டிரான்ஸ்பர் விண்டோ முடிவடைய இன்னும் சிறிது காலம் உள்ளது என்பது உண்மை தான். இருப்பினும், ஒரு வீரர் ஒரு அணியிலிருந்து மற்றொரு அணிக்கு மாறுவது பொதுவெளியில் தெரிந்தாலும், டிரேடிங் நடக்கும்போது, அதற்கான தொகைப் விவரங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு அணிகள், அந்த வீரர் மற்றும் பிசிசிஐ ஆகியோருக்கு மட்டுமே தெரியும்" என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
"இத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு அணிக்கும் உள்ள சம்பள வரம்பு சரியாகப் பின்பற்றப்பட்டதா அல்லது மீறப்பட்டதா என்பது மற்ற அணிகளுக்குத் தெரிவதில்லை. எனவே, முழுமையான வெளிப்படைத்தன்மைக்காக இந்த ஒப்பந்த தொகையையும் பகிரங்கமாக அறிவிப்பது முக்கியம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.முழுமையான வெளிப்படைத்தன்மை ஐபிஎல் தொடரின் மதிப்பைத் தக்கவைக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.