தென் மண்டல குழுவின் 31
தென் மண்டல குழுவின் 31-வது கூட்டம்: மாமல்லபுரத்தில் அமித் ஷா தலைமையில் நதி நீர் பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டதா?
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தென் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்: தமிழ்நாடு: முதலமைச்சர் விஜய் ஆந்திர பிரதேசம்: முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கர்நாடகா: முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கேரளா: முதலமைச்சர் வி.டி. சதீசன் தெலங்கானா: துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்க்க மல்லு யூனியன் பிரதேசங்கள்: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாசநாதன், அந்தமான் - நிக்கோபார் துணைநிலை ஆளுநர் டி.கே. ஜோஷி, லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் படேல்.
அமித்ஷா பேச்சு
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தென்னிந்தியாவின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது என்றும், அனைத்து துறைகளிலும் தென்னிந்தியா சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
"2004-2014 இடைப்பட்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 2.5 கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 2014 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 6 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன".
"2014 முதல் இதுவரை மொத்தம் 70 மண்டலக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அவற்றில் விவாதிக்கப்பட்ட 1,869 பிரச்சனைகளில் 1,445 பிரச்சனைகளுக்குப் (சுமார் 80%) பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது".
"சுமார் 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல சிக்கலான பிரச்சனைகள் இந்த மண்டலக் குழுக் கூட்டங்கள் மூலமாக வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டுள்ளன".
தென்னிந்திய மாநிலங்களின் விவசாயம், தொழில், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நல்வாழ்வு ஆகிய நான்கு தூண்களுக்கும் நீர்வளமே ஆன்மாவாக விளங்குகிறது என்று அமித் ஷா சுட்டிக்காட்டினார்.
மாநிலங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள நதிநீர் பிரச்சனைகளை ஜல் சக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கூட்டுக் கூட்டங்கள் மூலம் பரஸ்பர பேச்சுவார்த்தை வழியாக விரைவாகத் தீர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மத்திய உள்துறை அமைச்சரின் இந்த ஆக்கப்பூர்வமான பரிந்துரையைத் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் ஏற்றுக்கொண்டன.
ட்விட்டர் அஞ்சல்
Chaired 31st Meeting of Southern Zonal Council in Chengalpattu, Tamil Nadu.Under leadership of Modi Ji, the Zonal Councils have been transformed into platforms for resolving long-pending issues. Water sharing is a major issue among the southern states. At today’s meeting, these… pic.twitter.com/0MgTHOsgmU