துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி: இஷான் கிஷன் சதத்தால் கிழக்கு மண்டல அணி முன்னிலை
இஷான் கிஷன்
துலீப் டிராபி கிரிக்கெட் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. கிழக்கு மண்டலம், தென் மண்டல அணிகள் இறுதிப் போட்டியில் மோதின.
வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் குவித்த நிலையில் மிலிந்த் பந்தில், தியாகராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து களத்துக்கு வந்த ஷிகர் மோகன் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். அவர் 120 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அவுட்டானார்.
அரை சதத்தை கடந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த அபிமன்யு ஈஸ்வரன் 86 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ரன்-அவுட்டானார். சுதீப் குமார் கராமி 6 ரன்களில் பெவிலியன் வந்தார்.
முதல் நாள் ஆட்டநேர இறுதியில் கிழக்கு மண்டல அணி 79 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது.
தென் மண்டல அணி சார்பில் சாமா வி. மிலிந்த் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். திரிபுரான விஜய் ஒரு விக்கெட்டைச் சாய்த்தார்.
கைவசம் 6 விக்கெட்கள் மீதமுள்ள நிலையில் இன்று 2-ம் நாள் ஆட்டத்தை கிழக்கு மண்டல அணி தொடர்ந்து விளையாடவுள்ளது.