வீரர்களுக்கு அடிக்கடி காயம்.. 2027 உலககோப்பை குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம்
வீரர்களுக்கு அடிக்கடி காயம்.. 2027 உலககோப்பை குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம்
மும்பை: அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யவும், வீரர்களின் காயம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும், செப்டம்பர் 3, அன்று மும்பையில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் தொடர் காயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
ஹர்திக் ஏற்பட்டுள்ள காயத்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் 2026 தொடரில் விளையாடினார். அந்த சீசனின் இறுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஆனால் கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு மேம்பாட்டு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் வரவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.
ஒருநாள் போட்டிகளில் தனது முழு ஓவர்கள் கோட்டாவையும் பந்துவீசும் ஹர்திக் பாண்டியாவின் திறன் குறித்து அணி நிர்வாகத்திற்கும் தேர்வாளர்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. "ஒருநாள் போட்டிகளில் ஹர்திக்கால் 5 முதல் 6 ஓவர்களுக்கு மேல் வீச முடியாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக்கோப்பைக்கு அவர் மிகவும் முக்கியம் என்றாலும், அவரது உடற்தகுதி தொடர்ந்து கவலையளித்து வருகிறது" என்று தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், பிசிசிஐ செயலர் தேவாஜித் சாய்கியா, முதன்மை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ். லக்ஷ்மனும் இக்கூட்டத்தில் இணைய வாய்ப்புள்ளது. ஹர்திக் பாண்டியா கடைசியாக ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 2026 டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினார்.
ஒருநாள் உலகக்கோப்பை வரவிருப்பதால், அவர் பெரும்பாலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவார் என்று தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இருப்பினும், ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவர் விளையாடவில்லை; மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான அடுத்த தொடரிலும் அவர் விளையாடுவது சந்தேகமே.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது பும்ரா காயமடைந்தார். முதலில் அவர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார், பின்னர் காயத்தால் விலக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கொழும்பு பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக ஆகிப் நபி அணியில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.