📅 Friday, 28 August 2026 IST | ஆவணி 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 28, 2026 12:01 PM

BIG BOSS களத்தில் கிரிக்கெட் பிளேயர்? சீரியல் நடிகையும் உள்ள வராங்களா ?

BIG BOSS களத்தில் கிரிக்கெட் பிளேயர்? சீரியல் நடிகையும் உள்ள வராங்களா ?

BIG BOSS களத்தில் கிரிக்கெட் பிளேயர்? சீரியல் நடிகையும் உள்ள வராங்களா ?

பிக் பாஸ் சீசன் 10-ல் சிஎஸ்கே முன்னாள் வீரர் மற்றும் பிரபல சின்னத்திரை நடிகை போட்டியாளராக களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் குறித்த அறிவிப்புகள் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. இந்த சீசனில் பிரபல சின்னத்திரை நடிகை ஆல்யா மனசா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஆகியோர் போட்டியாளர்களாகக் களமிறங்க உள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

சின்னத்திரையில் 'ராஜா ராணி' தொடர் மூலம் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ஆல்யா மனசா. இவரது துடிப்பான பேச்சும் எதார்த்தமான குணமும் பிக் பாஸ் வீட்டிற்குள் புதிய சுவாரசியத்தைக் கூட்டும் எனக் கருதப்படுகிறது.

அதேபோல, இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி ஆட்டக்காரராகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் வலம் வந்த முரளி விஜய் முதன்முறையாக இத்தகைய ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு உலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் மட்டுமல்லாது, பொதுமக்களுக்கும் இம்முறை வாய்ப்பளிக்கும் வகையில் 'தி காமன் மேன்' (The Common Man) என்ற புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பிக் பாஸ் சீசன் 10, வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி மாலை 6 மணி முதல் பிரபல தனியார் தொலைக்காட்சி மற்றும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது. மேலும், 24 மணி நேர நேரலை (24x7 Streaming) வசதியும் ஜியோஹாட்ஸ்டாரில் வழங்கப்பட உள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தொகுப்பாளராகப் பொறுப்பேற்று இந்நிகழ்ச்சியை வழிநடத்தவுள்ளார். அதிகாரப்பூர்வப் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் செப்டம்பர் 6 அன்று நடைபெறவுள்ள பிரம்மாண்ட தொடக்க விழாவிலேயே (Grand Launch) முழுமையாகத் தெரியவரும் என்பதால், நிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.