📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health August 08, 2026 12:33 AM

இன்ஸ்டா தோழியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த நபர்; உணவு ஆர்டர் செய்யும்போது சிக்கினார்

இன்ஸ்டா தோழியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த நபர்; உணவு ஆர்டர் செய்யும்போது சிக்கினார்

இன்ஸ்டா தோழியை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்த நபர்; உணவு ஆர்டர் செய்யும்போது சிக்கினார்

மகாராஷ்டிராவில் அரசு அதிகாரி ஒருவரின் 18 வயது மகளை வாலிபர் ஒருவர் கடத்திச் சென்று இரண்டு நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 18 வயது மாணவி 12வது வகுப்பு படித்து வருகிறார். நட்பு தினமான ஞாயிற்றுக்கிழமை தனது நண்பருடன் ஒரு மாலுக்குச் செல்வதாக பெற்றோரிடம் தெரிவித்து விட்டு மாணவி தனது வீட்டை விட்டு வெளியில் சென்றார்.

ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரைத் தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவரது தொலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. மாணவியின் நண்பர்களிடமும் விசாரித்தனர். ஆனால் அவர் நண்பர்கள் யாரையும் சந்திக்காததை அறிந்த அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.

போலீஸார் அப்பெண்ணின் மொபைல் அழைப்புகள் மற்றும் சோசியல் மீடியா பதிவுகளை ஆய்வு செய்தபோது குற்றவாளி தொடர்பாக துப்பு கிடைத்தது. விசாரணையில் அந்த நபர் மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த நிர்பய் என்ற ஆகாஷ் மாதவ் பக்ரே என தெரியவந்தது.

வணிக நிர்வாக இளங்கலை (பிபிஏ) படித்து வந்த அவர், நாக்பூரில் வாடகைக்கு குடியிருப்பில் வசித்து வந்தார்.

அவரது தாயார் ஒரு புகழ்பெற்ற மருத்துவர். அவரது மொபைல் நம்பரைத் தேடி கண்டுபிடித்து அவரது பெற்றோரை போலீஸார் தொடர்பு கொண்டனர். அதோடு போலீஸார் நேரடியாக நிர்பய் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்தனர். அவர்களிடம் அவர்களது மகனுக்கு போன் பண்ணி பேசும்படி கேட்டுக்கொண்டனர்.

காட்டிக்கொடுத்த ஆன்லைன் உணவு

ஒரு போலீஸ் அதிகாரி தனது தாயிடம் பேசுவதைக் குற்றம் சாட்டப்பட்டவர் அறிந்ததும், அவர் பீதியடைந்து, சிறுமியைத் தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசும்படி கேட்டுக்கொண்டார். அப்பெண்ணும் தனது பெற்றோருக்கு போன் செய்து தான் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அந்த அழைப்பு மூலம் அவர்களின் இருப்பிடத்தை காவல்துறை உறுதி செய்தது. சிறிது நேரம் கழித்து, குற்றம் சாட்டப்பட்டவர் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தார். முகவரியை உறுதி செய்ய டெலிவரி பாயுடன் போலீசார் சென்றனர்.

படுக்கையில் நிர்வாணமாக பெண்

பெண் அடைத்து வைக்கப்பட்டு இருந்த கதவை போலீசார் உடைத்தபோது, ​​​​அப்பெண் நிர்வாணமாக, படுக்கையில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கத்தியை வைத்திருந்தார். அப்பெண்ணின் உடலில் பல பல்காயம் மற்றும் குத்தப்பட்ட காயங்கள் இருந்தன. மேலும் மணிக்கட்டு துண்டிக்கப்பட்டு இருந்தது. இன்னும் சிறிது நேரம் காத்திருந்திருந்தால், குற்றவாளிகள் சிறுமியைக் கொன்றிருப்பார்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ரஷ்மிதா கூறுகையில், "போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ​​ஜன்னல் வழியாக ஒரு மிருகத்தனமான மற்றும் கொடூரமான காட்சியை அவர்கள் கண்டனர். பாதிக்கப்பட்ட பெண் இரண்டு நாட்களாக பாலியல் மற்றும் உடல்ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு இருந்தார்.

அவரது கை துண்டிக்கப்பட்டு இருந்தது. சம்பவ இடத்தில் ஒரு கூர்மையான கத்தி கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் அவரைக் கொல்லத் தயாராகிக்கொண்டிருந்தார். சிறுமியின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வைரலாக்குவேன் என மிரட்டியது தெரியவந்தது. மேலும் அவர் அப்பெண்ணின் முழு குடும்பத்தையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்'' என்று தெரிவித்தார்.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர், காதல் விவகாரம் காரணமாக அவரும் சம்பந்தப்பட்ட பெண்ணும் ஒன்றாக இருந்ததாகவும், சிறுமி தனது கையைத் தானே வெட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

மேலும், சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவருடன் மறைவிடத்திற்குச் சென்றதாகவும், கடத்தலில் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே போலீஸ் விசாரணைக்கு கைது செய்யப்பட்ட நபர் ஒத்துழைக்க மறுத்து வருகிறார். காலை உணவாக பிட்சா கேட்டு வருகிறார். நிர்பயிடம் போலீஸார் விசாரணை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. விசாரணையில் அவரது மொபைல் போன் கடவுச்சொல் மற்றும் அப்பெண்ணின் மொபைல் ஃபோனைப் கொடுக்க மறுத்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் கேள்விகளைத் தவிர்ப்பதால் டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரிப்பதில் புலனாய்வாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் மங்கலான சுவர்கள், துர்நாற்றம் வீசும் கழிப்பறை, கொசு கடித்தல் மற்றும் தூக்கமில்லாத இரவுகள் உள்ளிட்ட லாக்அப் நிலைமைகள் குறித்து புகார்களை எழுப்பி வருகிறார்.

அவர் காலை உணவிற்கு பீட்சா, இரவு உணவிற்கு பிரீமியம் உணவு, தடிமனான குஷன் அல்லது மென்மையான படுக்கை மற்றும் பூச்சி விரட்டிகளைக் கொடுக்கும்படி கேட்டு வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாக மாறினர் என்று தெரிய வந்துள்ளது.