Cinema
August 13, 2026 01:01 PM
திரைத் துறையை ஒன்றிணைக்க தமிழ்த் திரைப்பட வளர்ச்சிக் கழகம்: முதல்வருக்கு ஆர்.கே.செல்வமணி கோரிக்கை
தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு (பெப்சி), 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இதன் தலைவராக ஆர்.கே.செல்வமணி போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 5-வது முறையாக பெப்சி தலைவராகியுள்ள அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது: தமிழ் சினிமா தற்போது சிரமமான நிலையில் இருக்கிறது.
அதாவது சில திரைப்படங்கள் பல கோடி வசூலை எட்டுவதும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் கூட வெளியிட முடியாத சூழலிலும் இருக்கின்றன.
நான் இயக்குநராக அறிமுகமாகும்போது சின்ன பட்ஜெட் படங்களும் பெரிய பட்ஜெட் படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றிபெற்றன.
தொடர்புடைய செய்திகள்
Cinema