விருதுநகர் மாவட்டத்தில் 2 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சிவகாசி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் ஆறுமுகசாமி. இவர் மீனம்பட்டி அருகே சுந்தர்ராஜபுரத்தில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (பெசோ) உரிமம் பெற்று வடிவேல் பைரோடெக் என்ற பெயரில்பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.
நேற்று காலை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது உலர்களத்தில் காய வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருட்களின் கலவையான மணி மருந்தில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது.
அதன் அருகே மரத்தடியில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்தவர் மீது தீ பட்டு, பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கின. இந்த விபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.