கோவை மாணவர் அமுதன் கொலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கோவை மாணவர் அமுதன் கொலை சம்பவத்திற்கு கண்டனம்! இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
உரிய விசாரணை நடத்தவும், போதைப் பொருள் கலாச்சாரத்தை முற்றாக ஒழித்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!! கோவை மாவட்டம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர் அமுதன் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொடூரக் கொலைக்கு மார்க்சிஸ்ட் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மாணவரை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கொடிய சம்பவம் தற்செயலாக நடந்ததில்லை. இதற்கு முன்பாக தொடர்ச்சியாக சிறிதும் பெரிதுமாக இரண்டு தாக்குதல்கள் மாணவர்களுக்குள் நடந்திருக்கிறது.
சிறுமைப்படுத்துவது சரியானது அல்ல
கல்லூரி நிர்வாகம் தயாராக இல்லை
போதை கலாச்சாரம்
கோவை மாவட்டத்தில் போதை கலாச்சாரத்தோடு இணைந்து வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 10 நாட்களில் 3 படுகொலை சம்பவங்கள் நடந்திருக்கிறது. இந்த உண்மையை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
சமூக பொறுப்புணர்வு
எனவே, கோவையை சூழ்ந்து வருகிற இந்த போதை சார்ந்த வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும், போதை கலாச்சாரத்தை முற்றாக ஒழிப்பதற்கும் காவல்துறை முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.