📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 11, 2026 04:04 PM

அரைகுறை அறிவே இருப்பதே வீரர்கள் காயத்திற்கு காரணம்.. முன்னாள் இந்திய வீரர் கருத்து

அரைகுறை அறிவே இருப்பதே வீரர்கள் காயத்திற்கு காரணம்.. முன்னாள் இந்திய வீரர் கருத்து

அரைகுறை அறிவே இருப்பதே வீரர்கள் காயத்திற்கு காரணம்.. முன்னாள் இந்திய வீரர் கருத்து

மும்பை: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், ஐபிஎல் சாம்பியனுமான முகமது கைப், இந்திய வீரர்களின் தொடர் காயங்கள் குறித்தும், ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்தும் தனது கவலைகளைப் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட் 15 அன்று காலேவில் தொடங்கவுள்ள இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, எஸ்எல்சி லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டிக்கு பிறகு அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2026 தொடருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா எந்தவொரு தொழில்முறை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை. அவர் காயத்தில் இருந்து மீள பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இலங்கைத் தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்ஷன்ஆகியோர் காயங்கள் காரணமாக ஏற்கனவே விலகியுள்ள நிலையில், பல இந்திய வீரர்கள் உடற்தகுதிப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தனது யூடியூப் சேனலில் பேசிய கைப், "ஹர்திக் பாண்டியாவை பாருங்கள். அவர் எவ்வளவு காலமாக காயங்களால் அவதிப்பட்டு வருகிறார்? அவர் விளையாடுகிறார், மீண்டும் காயம் அடைகிறார். நமது முக்கிய வீரர்களில் பலருக்கு காயங்கள் ஏற்பட்ட வரலாறு உள்ளது. எனவே, எங்கோ ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. இதை ஒரு தீவிரமான பிரச்சனையாக நாம் அங்கீகரிக்க வேண்டும்."

"முதலில், இது நமது உலகக் கோப்பை கனவையோ அல்லது ஒரு தொடரையோ இழக்கச் செய்யலாம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒரு முக்கிய வீரர் சரியான நேரத்தில் தகுதியுடன் இல்லை என்றால், அதை நாம் முதலில் ஏற்றுக்கொண்டு, அதற்கான தீர்வை நோக்கி உழைக்க வேண்டும்."

"நான் முன்பே கூறியது போல், இது ஒரு முக்கியமான விஷயம். ஒவ்வொரு மாதமும் போட்டிகள் நடக்கின்றன. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு போட்டி நடந்து கொண்டே இருக்கிறது. இதனால், தங்களது இடத்தை வேறு யாராவது பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில், வீரர்கள் காயத்தில் இருந்து அவசரமாக மீண்டு வர நினைக்கிறார்கள்"

"எனக்கு பதிலாக வேறு யாராவது வந்து என் இடத்தை பிடித்துவிட்டால் என்ன செய்வது?' என்ற எண்ணம் அவர்களுக்குள் எழுகிறது. அங்குதான் ஒரு நல்ல பிசியோதெரபிஸ்ட், முறையான வழிகாட்டுதல் மற்றும் வீரரை சரியாக வழிநடத்தும் உடற்பயிற்சி நிபுணர் ஆகியோர் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். சில நேரங்களில் அதிகப்படியான பயிற்சியின் காரணமாகவும் காயங்கள் ஏற்படலாம்."

"அதே நேரத்தில், அரைகுறை அறிவு கொண்ட உடற்பயிற்சி நிபுணரோ அல்லது பிசியோதெரபிஸ்ட்டோ நமக்குத் தேவையில்லை என்பதை நான் மீண்டும் கூறுகிறேன். போதிய அனுபவம் இல்லாதவர்கள் தலையிட வேண்டிய இடத்தில் தலையிட மாட்டார்கள். ஒருவேளை அவர்கள் தலையிட்டாலும், அவர்களின் முழுமையான பின்னணியும் அனுபவமும் மிகவும் முக்கியமானது. காயங்களுக்கு சிகிச்சை அளித்த அனுபவம் வாய்ந்தவர்கள், பல்வேறு வகையான காயங்களை கையாண்டு வீரர்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் மட்டுமே இங்கு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்," என்று அவர் கூறினார்.